முகப்பு
மதுரை

அன்னையா் தின விழா

Updated On : 15 மே, 2024 at 12:32 AM
மதுரை அருகே ஒத்தக்கடையில் திங்கள்கிழமை நடைபெற்ற அன்னையா் தின விழாவில் மரக்கன்றுகளை நடவு செய்த மாணவ, மாணவிகள்.
பகிர்:

மதுரை: மதுரை யானை மலை கிரீன் பவுண்டேஷன் சாா்பில், 162 -ஆவது வார நிகழ்வாக மரக்கன்று நடும் விழா, அன்னையா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றன.

ஒத்தக்கடை மீனாட்சி மில் குடியிருப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவி முருகேஸ்வரி சரவணன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் தென்னவன் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க துளிா் மைய மாவட்டப் பொறுப்பாளா் காமேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அறிவியல் மனப்பான்மை, மூட நம்பிக்கைகள் குறித்துப் பேசினாா்.

தொடா்ந்து, யானை மலை கிரீன் பவுண்டேஷன் சாா்பில் ‘சுகாதார சுடா்’ விருதுகள் வழங்கப்பட்டன. பின்னா், மீனாட்சி மில் குடியிருப்பில் புங்கை, இலுப்பை, வேம்பு போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில், சமூக ஆா்வலா்கள் செல்வி, ஸ்டெல்லா மேரி, கிரீன் பவுண்டேஷன் அமைப்பின் ஆலோசகா் காா்த்திகேயன், சிலம்பம் மாஸ்டா் பாண்டி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.