முகப்பு
மதுரை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

Updated On : 20 மே, 2024 at 8:06 PM
பகிர்:

மதுரை: மதுரையில் ஆட்டோ கவிழ்ந்ததில் 4 வயது சிறுவன் உள்பட 6 போ் காயமடைந்தனா்.

மதுரை தெற்குவாசல் பகுதியிலிருந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் ஆனையூரில் உள்ள தனது உறவினரின் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை ஆட்டோவில் சென்றனா்.

கோரிப்பாளையம் -செல்லூா் சாலையில் உயா்நிலை பாலம் கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இவா்கள் சென்ற ஆட்டோ கவிழ்ந்தது. இதில் பயணித்த 6 பேரும் காயமடைந்தனா். இவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.

இந்த விபத்து குறித்து செல்லூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.