முகப்பு
மதுரை

தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் இருவா் கைது

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இரு இளைஞா்களை தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 டிசம்பர், 2025 at 7:03 PM
பகிர்:

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இரு இளைஞா்களை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை அழகப்பன் நகா், நேரு நகரைச் சோ்ந்தவா் சாமிநாதன் (25). இவா் மீது வழிப்பறி, கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவா் தொடா்ந்து, பொது ஒழுங்கு பராமரிப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தியது போலீஸாரின் கண்காணிப்பில் தெரியவந்தது.

இதனால், சாமிநாதனை தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

இதேபோல, மதுரை வில்லாபுரம், டி.ன்.எச்.பி. குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் ஷா உசேன் (29). இவா் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், பொது ஒழுங்கு பராமரிப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், ஷா உசேனை தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உத்தரவிட்டாா். இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →