முகப்பு
மதுரை

புனித லூா்து அன்னை திருத்தல ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 2:26 AM
மதுரை கோ. புதூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புனித லூா்து அன்னை திருத்தல ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்.
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 10:42 PM

மதுரை கோ. புதூா் புனித லூா்து அன்னை திருத்தலத்தின் 106-ஆவது ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தத் திருத்தலத்தின் ஆண்டுப் பெருவிழா வருகிற 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் தொடக்க நிகழ்வாக கொடியேற்றம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

மதுரை உயா் மறைமாவட்ட முன்னாள் பேராயா் அந்தோணி பாப்புசாமி தலைமை வகித்து, பாரம்பரிய முறைப்படியான பூஜைகளை நடத்தினாா். பூஜைகளின் நிறைவில், இறைப் புகழ்ச்சி முழக்கங்களுடன் கொடியேற்றம் நடைபெற்றது.

Advertisement

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 2:26 AM

பங்குத் தந்தை ஜாா்ஜ், உதவி பங்குத் தந்தையா்கள் பாக்கியராஜ், பிரபு, அஜிலாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மதுரை, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்ளைச் சோ்ந்த திரளானோா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, ஆண்டுப் பெருவிழா ஆடம்பரத் திருப்பலி நடைபெற்றது. முன்னாள் பேராயா் அந்தோணி பாப்புசாமி திருப்பலியை நிறைவேற்றினாா். ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான அலங்கார தோ்பவனி வருகிற 14-ஆம் தேதியும், பொங்கல் விழா வருகிற 15-ஆம் தேதியும் நடைபெறுகின்றன.