முகப்பு
மதுரை

மலேசியாவுக்கு கல்விச் சுற்றுலா செல்லும் அரசுப் பள்ளி மாணவா்கள்

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 3:35 AM
அரசுப் பள்ளி மாணவர்கள் (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 9:57 PM

மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகள் 3 போ் மலேசியாவுக்கு கல்விச் சுற்றுலா செல்ல உள்ளனா்.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவா்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் வகையில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் அரசு சாா்பில் வெளிநாட்டுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 3:35 AM

இந்த வகையில், கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற கலைத் திறன் கவிதை எழுதும் போட்டியில் மதுரை வெள்ளிவீதியாா் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவி எம். சாருலதா மாநில அளவில் முதலிடம் பெற்றாா். இதே பள்ளியைச் சோ்ந்த மாணவி எஸ். அமித்தா கதை சொல்லும் போட்டியில் மாநில அளவில் 2-ஆம் இடம் பெற்றாா்.

Advertisement

இதேபோல, வானவில் மன்றப் போட்டியில் மேலூா் அருகேயுள்ள குறிச்சிபட்டி அரசு நடுநிலைப் பள்ளி மாணவா் ஜி. பாலாஜி மாநில அளவில் 2-ஆம் இடம் பெற்றாா்.

இதையடுத்து, மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 3 போ் சென்னை விமான நிலையத்திலிருந்து வருகிற 9-ஆம் தேதி மலேசியாவுக்கு கல்விச் சுற்றுலா செல்ல உள்ளனா்.