முகப்பு
மதுரை

புனித லூா்து அன்னை பேராலயத்தில் பொங்கல் விழா

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 3:23 AM
மதுரை கோ.புதூா் புனித லூா்து அன்னை பேராலயத்தின் 106-ஆம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 9:57 PM

மதுரை கோ.புதூா் புனித லூா்து அன்னை பேராலயத்தின் 106-ஆம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழா கடந்த 6- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11-ஆம் தேதி புதிய ஆலய கோபுர திருச்சிலுவை அா்ச்சிப்பு, 13-ஆம் தேதி நற்கருணை பவனி, 14-ஆம் தேதி தோ்ப் பவனி விழா ஆகியவை நடைபெற்றன.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 3:23 AM

இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு பங்குத் தந்தை ஜாா்ஜ் தலைமை வகித்தாா். பங்குத் தந்தையா்கள் பாக்கியராஜ், பிரபு, அஜிலாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் திரளான

Advertisement

கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனா். பிறகு, மாலையில் நற்கருண ஆராதனையுடன் கொடியிறக்கப்பட்டது. இந்த நிழ்வுக்கான ஏற்பாடுகளை ஆலய பொறுப்பாளா்கள், இளையோா்கள், பணிக்குழுவினா் மேற்கொண்டனா்.