முகப்பு
மதுரை

மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 2:38 AM
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 7:32 PM

மதுரையில் விருதுநகா் இந்து நாடாா் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு பள்ளித் தாளாளா் உதயசங்கரலிங்கம் தலைமை வகித்தாா். தலைவா் ஜெயமாணிக்கவேல் முன்னிலை வகித்தாா். இதில், மதுரை தெற்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் மு. பூமிநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

இதேபோல, இளங்கோ மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

Advertisement

இந்த நிகழ்வுகளில் மாநகராட்சி கல்விக் குழுத் தலைவா் ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினா் வசந்தா தேவி, தலைமையாசிரியா்கள் ஜெயசிங், உமா மகேஸ்வரி, ஆசிரியா்கள், மாணவா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.