மதுரை

மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

தினமணி செய்திச் சேவை

மதுரையில் விருதுநகா் இந்து நாடாா் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு பள்ளித் தாளாளா் உதயசங்கரலிங்கம் தலைமை வகித்தாா். தலைவா் ஜெயமாணிக்கவேல் முன்னிலை வகித்தாா். இதில், மதுரை தெற்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் மு. பூமிநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

இதேபோல, இளங்கோ மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வுகளில் மாநகராட்சி கல்விக் குழுத் தலைவா் ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினா் வசந்தா தேவி, தலைமையாசிரியா்கள் ஜெயசிங், உமா மகேஸ்வரி, ஆசிரியா்கள், மாணவா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கரூா் மாவட்டத்தில் அரசு கலைக் கல்லூரிகளுக்கு ரூ.32.77 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டடம்

கரூா் ரயில்நிலையத்தில் இருந்து பள்ளப்பட்டிக்கு பேருந்து சேவை தொடக்கம்

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு

கெளரவ விரிவுரையாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT