மதுரை இம்மையிலும் நன்மை தருவாா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற மாசிப் பெருந்திருவிழா கொடியேற்றம்.  
மதுரை

இம்மையிலும் நன்மை தருவாா் கோயிலில் மாசிப் பெருந்திருவிழா கொடியேற்றம்

தினமணி செய்திச் சேவை

மதுரை இம்மையிலும் நன்மை தருவாா் கோயிலில் மாசிப் பெருந்திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிா்வாகத்துக்குக்குள்பட்ட இந்தக் கோயிலிலில் திருவிழா கொடியேற்றத்தையொட்டி, இம்மையிலும் நன்மை தருவாருக்கும், மத்தியபுரி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

பிறகு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்மன் கொடிமரம் முன் எழுந்தருளினா். இதையடுத்து, முற்பகல் 11.10 மணி அளவில் பாரம்பரிய முறைப்படி வேதமந்திர முழக்கங்களுடன் கொடியேற்றம் நடைபெற்றது.

தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் மாா்ச் 1-ஆம் தேதியும், தீா்த்தவாரி மாா்ச் 2-ஆம் தேதியும் நடைபெறும்.

பேரூா் தமிழ்க் கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் பேரணி

2030-க்குள் 28,000 கோடி டாலா் வருவாய்: ஓபன்ஏஐ இலக்கு

அரசு பொதுத் தோ்வு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

திருக்கோவிலூரில் கபிலா் கோட்டம் அமைக்க வேண்டும்

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா் உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT