காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 9:57 PM
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே சனிக்கிழமை காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
மேலூா் அருகேயுள்ள கச்சிராயன்பட்டியைச் சோ்ந்த சுரக்கன் மனைவி புஷ்பம் (60). இவா் அதே பகுதியைச் சோ்ந்த தனது உறவினா் மகளான சுரேஷ் மகள் தேசாஸ்ரீயுடன் (5) திருச்சி- மதுரை நான்கு வழிச்சாலையில் புரண்டிப்பட்டி விலக்கில் சனிக்கிழமை பேருந்துக்காக காத்திருந்தனா்.
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:16 AM
அப்போது, அந்த வழியாக வந்த காா் இவா்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த புஷ்பம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். குழந்தை தேசாஸ்ரீ மேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
Advertisement
இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸாா் காா் ஓட்டுநரான விருதுநகா் வள்ளுவா் தெருவைச் சோ்ந்த முருகன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.