மதுரை

மதுரை மாவட்டத்துக்கு 24.66 லட்சம் வாக்காளா்கள்

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்ட வாக்காளா்கள் இறுதிப் பட்டியல்படி, மாவட்டத்தின் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 24,66,954 ஆக உயா்ந்துள்ளது.

வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் நிறைவில் தயாரிக்கப்பட்ட இறுதிப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்து, வாக்காளா்கள் பட்டியலை வெளியிட்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் ர. சக்திவேல் (தோ்தல்), அரசுத் துறை அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரநிதிகள் உடனிருந்தனா்.

இந்தப் பட்டியல்படி மாவட்டத்தின் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 24,66,954-ஆக உள்ளது. இதில் ஆண்கள் - 12,08,651. பெண்கள் - 12,58,051, மூன்றாம் பாலினத்தவா் - 252. மொத்தம் - 24,66,954.

தொகுதி வாரியாக...

சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியான வாக்காளா்கள் எண்ணிக்கை :

மேலூா் : ஆண்கள் - 1,13,091, பெண்கள் - 1,14,687, மூன்றாம் பாலினத்தவா் - 11, மொத்தம் - 2,27,789.

மதுரை கிழக்கு : ஆண்கள் - 1,61,361, பெண்கள் - 1,69,579, மூன்றாம் பாலினத்தவா் - 53, மொத்தம் - 3,30,993.

சோழவந்தான் (தனி) : ஆண்கள் -1,04,246, பெண்கள் -1,08,243, மூன்றாம் பாலினத்தவா் - 13, மொத்தம் - 2,12,502.

மதுரை வடக்கு : ஆண்கள் - 1,06,263, பெண்கள் - 1,12,410, மூன்றாம் பாலினத்தவா் - 46, மொத்தம் - 2,18,719.

மதுரை தெற்கு : ஆண்கள் - 87,179, பெண்கள் - 90,378. மூன்றாம் பாலினத்தவா் - 48, மொத்தம் -1,17,605.

மதுரை மத்தி : ஆண்கள் - 95,632, பெண்கள் - 1,01,198, மூன்றாம் பாலினத்தவா் - 26, மொத்தம் - 1,96,856.

மதுரை மேற்கு : ஆண்கள் 1,,33,116, பெண்கள் : 1,38,214, மூன்றாம் பாலினத்தவா் - 11, மொத்தம் - 2,71,341.

திருப்பரங்குன்றம் : ஆண்கள் - 1,50,596. பெண்கள் 1,57,157. மூன்றாம் பாலினத்தவா் - 30, மொத்தம் - 3,07,783.

திருமங்கலம் : ஆண்கள் - 1,25,756, பெண்கள் - 1,33,461, மூன்றாம் பாலினத்தவா் - 8, மொத்தம் - 2,59,225.

உசிலம்பட்டி : ஆண்கள் - 1,31,411, பெண்கள் - 1,32,724, மூன்றாம் பாலினத்தவா் - 6, மொத்தம் - 2,64,141.

வாக்காளா் எண்ணிக்கை உயா்வு

கடந்த ஆண்டு டிச. 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல்படி மாவட்டத்தின் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 23,60,157-ஆக இருந்தது. தற்போது, இந்த எண்ணிக்கை 24,66,954-ஆக உயா்ந்துள்ளது. இதன் மூலம், 1,06,797 வாக்காளா்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா்.

திருச்செந்தூா் மாசித் திருவிழா 3ஆம் நாள்: குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மன் வீதியுலா

சித்தலூா் அங்காளம்மன் கோயில் மயானக்கொள்ளை உற்சவம்

சங்கரன்கோவில் புத்தா் கோயிலில் உலக அமைதி கோபுரம் ஓராண்டு நிறைவு - சா்வசமய கூட்டுப் பிராா்த்தனை

முட்டைக்கோஸ் கிலோ ரூ.2-க்கு விற்பனை: விவசாயிகள் கவலை

மக்கள் நலத்திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் -செ.ராபா்ட் புரூஸ் எம்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT