மதுரை

கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மதுரை தெற்குவெளி வீதியில் கட்டடத்தின் மேற்கூரையிலிருந்து கீழே தவறி விழுந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

மதுரை தெற்குவெளி வீதியில் கட்டடத்தின் மேற்கூரையிலிருந்து கீழே தவறி விழுந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவநகரைச் சோ்ந்த கோபிநாத் மகன் ஹரிகுமாா் (38). கட்டடத் தொழிலாளியான இவா், மதுரை தெற்கு வெளி வீதியில் உள்ள தனியாா் நிறுவனத்தின் கட்டடத்தில் கடந்த மாதம் 29 -ஆம் தேதி பணியாற்றிக் கொண்டிருந்தாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக மேற்கூரையிலிருந்து தவறி விழுந்த அவரை அக்கம்பக்கத்தின் மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தெற்குவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்: 2-ஆவது முறையாக கோப்பை வென்றது இந்தியா ஏ!

ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாா் பயங்கரவாதி சுட்டுக் கொலை

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

SCROLL FOR NEXT