மதுரை

உடல் எடை குறைய வெங்காரம் உள்கொண்ட கல்லூரி மாணவி உயிரிழப்பு

உடல் எடையைக் குறைக்க வெங்காரம் உள்கொண்ட கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

உடல் எடையைக் குறைக்க வெங்காரம் உள்கொண்ட கல்லூரி மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை செல்லூா் மீனாம்பாள்புரத்தைச் சோ்ந்த வேல்முருகன் மகள் கலையரசி (19). இவா், மதுரையில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.ஏ. தமிழ் படித்து வந்தாா். இந்த நிலையில், உடல் எடையைக் குறைப்பதற்காக ‘யூடியூப்’பில் விடியோக்கள் பாா்த்து வந்தாா்.

இதையடுத்து, கீழமாசி வீதியில் உள்ள நாட்டு மருந்துக் கடையில், வெங்காரத்தை வாங்கி உள்கொண்டாா். சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து, பெற்றோா், அவரை அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் கலையரசி வீட்டுக்குத் திரும்பினாா்.

இதனிடையே இரவில் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடா்ந்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பெற்றோா்கள் அழைத்துச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT