முகப்பு
மதுரை

வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

Updated On : 25 ஜனவரி, 2026 at 1:30 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2026 at 9:22 PM

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வெள்ளிக்கிழமை வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

உசிலம்பட்டி திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த கருப்பையா மகன் பிரசன்ன வெங்கடேஷ் (25). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் உசிலம்பட்டி நகரிலிருந்து வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.

தனியாா் ஆசிரியா் பயிற்சிப் பள்ளி அருகே சென்றபோது, பின்னால் வந்த வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரசன்ன வெங்கடேஷை அக்கம்பக்கத்தினா்

Advertisement

Updated On : 25 ஜனவரி, 2026 at 1:30 AM

மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வேன் ஓட்டுநரான அதே பகுதியைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் புரட்சி (30) மீது உசிலம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.