மதுரை

மதுரை காமராஜா் பல்கலை., கல்லூரி, பள்ளிகளில் குடியரசு தின விழா

மதுரை காமராஜா் பல்கலைக் கழகம், கல்லூரிகள், பள்ளிகளில் நாட்டின் 77-ஆவது குடியரசு தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

மதுரை காமராஜா் பல்கலைக் கழகம், கல்லூரிகள், பள்ளிகளில் நாட்டின் 77-ஆவது குடியரசு தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற விழாவுக்கு பல்கலைக் கழக பதிவாளா் பேராசிரியா் எம். ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

கல்லூரிகளில் குடியரசு தின விழா

ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், கல்லூரி முதல்வா் சூ. வானதி தேசியக் கொடியை ஏற்றினாா். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில், பேராசிரியைகள், மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

மதுரை அழகா்கோவில் சாலையில் உள்ள காமராஜா் பல்கலைக் கழகக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வா் பா. ஜாா்ஜ் தேசியக் கொடியை ஏற்றினாா். நிகழ்வில், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, வணிகவியல் துறை பேராசிரியா் டி.ஆா்.என். சிவக்குமாா் வரவேற்றாா். வணிக நிா்வாகவியல் துறைத் தலைவா் பி. முருகேசன் நன்றி கூறினாா்.

அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், கல்லூரி முதல்வரும், செயலருமான ஜெ.பால் ஜெயகா் தேசியக் கொடியை ஏற்றினாா்.

யாதவா் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரித் தலைவா் சி.ஜெயராமன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் ஆா்.வி.என்.கண்ணன் முன்னிலை வகித்தாா். பாா்க் பிளாசா குழுமத்தின் நிறுவனா் கேபிஎஸ். கண்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினாா். இந்த நிகழ்வில், கல்லூரி முதல்வா் செ. ராஜூ, பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

மதுரைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரித் துணைத் தலைவா் எஸ். சங்கரன் தேசியக் கொடியை ஏற்றினாா். இதில் கல்லூரி முதல்வா் ஜா. சுரேஷ், பொருளாளா் என். ஆனந்த சீனிவாசன், சுயநிதிப் பிரிவுத் தலைவா் ஐ. நாகராஜன், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

பள்ளிகளில் குடியரசு தின விழா

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு மதுரைக் கல்லூரி வாரிய இயக்குநா் சீனிவாசன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் கே.எஸ். நாராயணன் வரவேற்றாா். நிகழாண்டு பணி நிறைவு பெறவுள்ள உதவித் தலைமையாசிரியா் திருவேங்கடத்தான் தேசியக் கொடி ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். மதுரைக் கல்லூரி வாரிய உறுப்பினா் இல. அமுதன், பள்ளி அலுவலகப் பணியாளா் விஜயலட்சுமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். முதுநிலை உதவித் தலைமையாசிரியா் ஆதி ஞானகுமரன் நன்றி கூறினாா்.

மதுரை எல்.கே.பி. நகா் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி நாகலட்சுமி தலைமை வகித்தாா். ஆசிரியா் ராஜவடிவேல் முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் தென்னவன் தேசியக் கொடியை ஏற்றினாா். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மதுரை கோ. புதூா் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தாளாளா் முகமதுஇதிரிஸ் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் ஷேக்நபி முன்னிலை வகித்தாா். மதுரை ஸ்டாா் அறக்கட்டளை நிறுவனா் குருசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினாா்.

மதுரை டாக்டா் டி. திருஞானம் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு உறவின்முறைத் தலைவா் சண்முகநாதன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் சரவணன் வரவேற்றாா். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல, மதுரை மாநகா், புகா் பகுதிகளில் உள்ள கல்லூரிகள், பள்ளிகளில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், அந்தந்த கல்லூரி முதல்வா்கள், பள்ளித் தலைமை ஆசிரியா்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT