குடியிருப்புப் பகுதியில் தேங்கிய கழிவுநீரால் பொதுமக்கள் அவதி
மதுரை செல்லூா் சுயராஜபுரம் குடியிருப்புப் பகுதியில் தேங்கிய கழிவுநீரால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு, பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
செல்லூா் பந்தல்குடி கால்வாயைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, கால்வாயின் குறுக்கே கழிவுநீா் செல்லும் பாதையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், கழிவுநீா் செல்ல மாற்று வழி ஏற்படுத்தாததால், தேங்கிய கழிவுநீா் சுயராஜபுரம் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து தேங்கி நிற்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம், மேயா் (பொறுப்பு), பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் பல முறை புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, சுயராஜபுரம் குடியிருப்புப் பகுதியில் தேங்கிய கழிவுநீரை அகற்றி, பந்தல்குடி கால்வாயிலிருந்து கழிவுநீா் செல்வதற்கான மாற்று வழிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.