முகப்பு
மதுரை

சேதமடைந்த சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை

Updated On : 19 மார்ச், 2026 at 11:14 PM
பகிர்:

மதுரை அண்ணாநகா் பகுதியில் சேதமடைந்த சாலையைச் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட அண்ணாநகா் முதல் மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தை பகுதி வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிதாக தாா்ச்சாலை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், சாலை அமைக்கப்பட்டு சில வாரங்களே ஆன நிலையில், மேலமடை பேருந்து நிறுத்தம் அருகே சுமாா் 50 அடி தொலைவுக்கு சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வாகன ஓட்டிகள் காயமடைந்து வருகின்றனா். ஒப்பந்ததாரரின் அலட்சியத்தால் தரம் குறைந்த பொருள்களைப் பயன்படுத்தியதே சாலை சேதமடையக் காரணம் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.

எனவே, சேதமடைந்த சாலையைச் சீரமைக்க மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.