கொடைக்கானலில் தொடர் விடுமுறையையொட்டி சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது
சுதந்திர தினவிழா மற்றும் தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் இங்குள்ள வெள்ளிநீர் வீழ்ச்சி,பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாதலங்களில் அதிகம் காணப்பட்டனர்.
கூடுதல் பேருந்துகள் இயக்கம்: கொடைக்கானலில் வரும் 14- 15 ஆம் தேதிகளில் புனித சலேத் அன்னையின் 151-வது ஆண்டு பெருவிழா நடைபெறுகிறது.
இதற்காக மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி, வத்தலக்குண்டு ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சென்னை, பெங்களுரூ போன்ற இடங்களுக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதனிடையே பாதுகாப்புக்காக கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.