நத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் ஊர்க்காவல் படை வீரர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள அப்பாஸ்புரம் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜமுகம்(23). ஊர்காவல் படைப் பிரிவில் நத்தத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், சமுத்திராப்பட்டியிலிருந்து மோட்டார் சைக்களில் நத்தம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு
புறப்பட்டுள்ளார். சமுத்திராப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே வந்துகொண்டிருந்தபோது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த ராஜமுகம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து நத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.