பழனி அருகே ஞாயிற்றுக்கிழமை ரயில் மோதி இளைஞர் உயிரிழந்தார்.
பழனி அருகேயுள்ள பழையஆயக்குடியைச் சேர்ந்தவர் காரல்மார்க்ஸ்(42). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை பழனியில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் மோதி உயிரிழந்தார்.
இவர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் முன்னாள் ஒன்றிய நிர்வாகியாக பொறுப்பு வகித்துள்ளார். இச்சம்பவம் விபத்தா அல்லது தற்கொலையா என பழனி ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.