திண்டுக்கல்

கன்னிவாடி அருகே சொத்துத் தகராறில் இருதரப்பினர் மோதல்: 6 பேர் கைது

DIN

கன்னிவாடி அருகே சொத்துத் தகராறில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 கன்னிவாடி அடுத்துள்ள வீரப்புடையான்பட்டியைச் சேர்ந்த கலியபெருமாள் மற்றும் கார்த்திகைவேல் இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
 இதுகுறித்து கன்னிவாடி காவல் நிலையத்தில் கலியபெருமாள் அளித்த புகாரின் பேரில் கார்த்திகைவேல் (35), மணிவேல் (17), அம்முனி அம்மாள் (70), ராசாத்தி (30) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் கார்த்திகைவேல், அம்முனி அம்மாள், ராசாத்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
 அதே போல கார்த்திகைவேல் மனைவி ராசாத்தி அளித்த புகாரின் பேரில் கலியபெருமாளின் மகன்கள் கருப்பையா என்ற சுரேஷ்குமார் (42), ராமசாமி (40), முத்தையா (39) மற்றும் உறவினர் சந்திரசேகர் (35) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 இதில் சந்திரசேகர், கருப்பையா என்ற சுரேஷ்குமார், முத்தையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரும் திண்டுக்கல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

தமிழகத்தில் இயல்பைவிட 83% மழை குறைவு!

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

SCROLL FOR NEXT