திண்டுக்கல்

வீட்டுமனைப் பட்டா சிறப்பு முகாம்

DIN

பழனியில் செவ்வாய்க்கிழமை முதல் வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்காக வருவாய்த்துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
 பழனி வட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில் வீட்டுமனைப் பட்டா வழங்கும் பொருட்டு அந்தந்த அரசுப் புறம்புகளில் வசிப்போருக்கு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் வட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனுக்களை வழங்கி பயன்பெறலாம்.  இதுகுறித்து வட்டாட்சியர் ராஜேந்திரன் விடுத்துள்ள அறிவிப்பில், செவ்வாய்க்கிழமை தொப்பம்பட்டி வருவாய் ஆய்வர் அலுவலகத்திலும், புதன்கிழமை தாளையூத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், வெள்ளிக்கிழமை ஆயக்குடி வருவாய் ஆய்வர் அலுவலகத்திலும், ஜூன் 27-ஆம் தேதி பாப்பம்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், ஜூன் 28-ஆம் தேதி நெய்க்காரபட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், ஜூன் 29-ஆம் தேதி பழனி எஸ்கேஎம் திருமண மண்டபத்திலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT