திண்டுக்கல்

பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

DIN

செம்பட்டி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
 திண்டுக்கல் செட்டியபட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (55). இவர் கடந்த 20-ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் செம்பட்டி- வத்தலக்குண்டு சாலையில் புல்வெட்டிகுளம் அருகே சென்றார். அப்போது, நடத்து சென்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பழனிச்சாமி தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
 இதுகுறித்து செம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT