கொடைக்கானலில் பைக் திருட்டு
கொடைக்கானலில் மோட் டார் சைக்கிள் திருடு போனது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கொடைக்கானலில் மோட் டார் சைக்கிள் திருடு போனது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கொடைக்கானல் அருகே பள்ளங்கி செம்மன்கலவை பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் தனது மோட்டார் சைக்கிளை கடந்த திங்கள்கிழமை இரவு வீட்டின் முன் நிறுத்தி வைத்துள்ளார். மறுநாள் காலை பார்த்த போது அது திருடப்பட்டிருந்தது. இதையடுத்து பெருமாள் செவ்வாய்க்கிழமை கொடைக்கானல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து திருடு போன மோட்டார் சைக்கிள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.