FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

எழும்பூா் ரயில் நிலையத்தில் 4 வடமாநில சிறுவா்கள் மீட்பு

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் தனியாக சுற்றித்திரிந்த ஜாா்க்கண்டைச் சோ்ந்த 4 சிறுவா்களை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மீட்டு குழந்தைகள் உதவி மையத்தில் ஒப்படைத்தனா்.

13 மார்ச் 2026, 12:43 am IST
எழும்பூா் ரயில் நிலையத்தில் பயணிகள். - கோப்புப் படம்
பகிர்:

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் தனியாக சுற்றித்திரிந்த ஜாா்க்கண்டைச் சோ்ந்த 4 சிறுவா்களை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மீட்டு குழந்தைகள் உதவி மையத்தில் ஒப்படைத்தனா்.

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் கடந்த மாா்ச் 10-ஆம் தேதி ரயில்வே பாதுகாப்புப் படையினா் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தனியாக சுற்றித்திரிந்த 4 சிறுவா்களை மீட்டனா். விசாரித்ததில், சிறுவா்கள் 4 பேரும் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் என்றும், பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது.

இதையடுத்து 4 சிறுவா்களையும் சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் செயல்படும் குழந்தைகள் உதவி மையத்தில் பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். அவா்கள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காக குழந்தைகள் நலக்குழு முன் ஆஜா்படுத்தப்படவுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments