திண்டுக்கல்

கொடைக்கானல் பாலமலை பகுதிக்கு வாகன வசதி செய்து தரக் கோரிக்கை

DIN

கொடைக்கானல் பாலமலை பகுதிக்கு வாகன வசதி செய்து தரக் கோரி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானல் அடுக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியான பாலமலை,அடுக்கம்,தாமரைக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இப் பகுதி மக்களுக்கு வாகன வசதியில்லாமல் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர் இப் பகுதி மக்கள் ஜீப் மற்றும் பிக் அப் வாகனங்களில் ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகின்றனர். மேலும் இப் பகுதிகளில் விளையக் கூடிய விவசாயப் பொருட்களையும் கொண்டு செல்வதற்கு வாகன வசதியில்லாமல் இப் பகுதி மக்கள் சிரமமடைந்து வருகின்றனர். எனவே பாலமலை பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு வாகன வசதி,சாலை வசதி செய்து கொடுக்க வேண்டுமென அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

SCROLL FOR NEXT