திண்டுக்கல்

மின்சாரம் பாய்ந்து பெயிண்டர் சாவு

DIN

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் சனிக்கிழமை வீட்டுக்கு வெள்ளையடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெயிண்டர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
செம்பட்டியைச் சேர்ந்த பொன்னையா என்பவர் வீட்டில், கடந்த 2 நாள்களாக வெள்ளையடிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் நிலக்கோட்டை அடுத்துள்ள மைக்கேல்பாளைத்தைச் சேர்ந்த மரியராஜ் (36), அதே பகுதியைச் சேர்ந்த மேலும் 2 பேருடன் வெள்ளையடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை வழக்கம் போல் வெள்ளையடிக்கும் பணி நடைபெற்ற போது, வீட்டின் மாடியில் பணி செய்து கொண்டிருந்த மரியராஜ், அருகில் சென்ற உயரழுத்த மின்சார வயரில் தவறி விழுந்து விட்டாராம்.
இதில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மரியராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள், செம்பட்டிக்கு வந்து பொன்னையாவின் வீட்டை முற்றுகையிட்டனர்.
உயிரிழந்த மரியராஜ் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து சடலத்தை எடுக்க விடாமல் தடுத்தனர். இதனை அடுத்து, செம்பட்டி காவல் ஆய்வாளர் சேசு ராஜசேகரன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி, பிரேத பரிசோதனைக்காக சடலத்தை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

SCROLL FOR NEXT