திண்டுக்கல்

கொடைக்கானலில் புனித பாத்திமா மாதா கோயில் திருவிழா தொடக்கம்

DIN

கொடைக்கானலில் உள்ள புனித பாத்திமா மாதா கோயில் திருவிழா புதன்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    கொடைக்கானல் செண்பகனூர் தைக்கால் பகுதியிலுள்ள இந்த கோயில் திருவிழாவையொட்டி  புனித சேவியர் ஆலயப் பங்குத் தந்தை ஏஞ்சல்ராஜ் தலைமையில் சிறப்புத் திருப்பலி,  நவநாள் ஜெபவழிபாடு ஆகியவை நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொடைக்கானல் பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
  தொடர்ந்து 10 நாள்கள் கோயிலில் சிறப்புத் திருப்பலி மற்றும் நவநாள் ஜெப வழிபாடு நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அருட்பணியாளர்கள், விழாக்குழுவினர் உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

SCROLL FOR NEXT