திண்டுக்கல்

பழனியில் பக்தரின் கார் கண்ணாடியை உடைத்து நகை, பணம் திருட்டு

DIN

பழனி அடிவாரம் பகுதியில் வெள்ளிக்கிழமை பக்தரின் கார் கண்ணாடியை உடைத்து பணம், நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
வத்தலகுண்டுவைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி ராஜா தனது குடும்பத்தினருடன் பழனியில் நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்பதற்காக காரில் வந்தார்.
திருமணம் முடிந்த பின் திருஆவினன்குடி கோயில் அருகே காரை நிறுத்தி விட்டு சுவாமி தரிசனம் செய்யச் சென்றார். திரும்பி வந்து பார்த்த போது கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த 7 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் இருந்த கைப்பையை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அடிவாரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT