திண்டுக்கல்

தேசிய கால்பந்து போட்டி: டிச.12 இல் மாநில அணி தேர்வு

DIN

அரசு அலுவலர்கள் பங்கேற்கும் தேசிய அளவிலான கால்பந்து போட்டிக்கான தமிழக அணி தேர்வு டிச.12 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திண்டுக்கல் மாவட்ட அலுவலர் செ.சௌந்தரராஜன் தெரிவித்ததாவது: 
2018-19 ஆம் ஆண்டுக்கான அரசு அலுவலர்களுக்கான தேசிய அளவிலான கால்பந்து போட்டிகள்(ஆண்களுக்கு மட்டும்) டிச.17 முதல் 22 ஆம் தேதி வரை, மத்தியப்பிரதேச மாநிலம்  போபாலில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கவுள்ள தமிழக அணிக்கான தேர்வு, டிச.12ஆம் தேதி சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. மாநில அணி தேர்வில் பங்கேற்க விரும்பும் அரசு அலுவலர்கள் அடையாள அட்டையுடன் செல்ல வேண்டும்.  வயது வரம்பு கிடையாது. சீருடைப் பணியாளர்கள் பங்கேற்க இயலாது.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலரை  0451-2461162 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT