திண்டுக்கல்

தொடர் விடுமுறை: பழனி கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

DIN

ரமலான் தொடர் விடுமுறையையொட்டி, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பழனி மலைக் கோயிலுக்கு செல்லும் ரோப் கார்,  வின்ச் நிலையங்களில் கட்டண டிக்கெட் வழங்குமிடத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் டிக்கெட் பெற நீண்ட வரிசையில் காத்திருந்தனர். படி வழியிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. மலைக்கோயிலில் கட்டண தரிசன வரிசை, இலவச தரிசன வரிசை என அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியதால் சுவாமி தரிசனத்துக்கு சுமார் மூன்று மணி நேரமானது.  பக்தர்களுக்கு வேண்டிய குடிநீர், பாதுகாப்பு வசதி மற்றும் தரிசன ஏற்பாடுகளை பழனிக் கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார் மேனகா உள்ளிட்டோர் தலைமையில் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT