கொடைக்கானல் அருகே காயத்துடன் கடமான் மீட்பு
கொடைக்கானல் அருகே செண்பகனூர் பகுதியில் காயமடைந்த நிலையில் காணப்பட்ட கடமானை வனத்துறையினர் மீட்டு வனப் பகுதிக்குள் திங்கள்கிழமை விட்டனர்.
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM
கொடைக்கானல் அருகே செண்பகனூர் பகுதியில் காயமடைந்த நிலையில் காணப்பட்ட கடமானை வனத்துறையினர் மீட்டு வனப் பகுதிக்குள் திங்கள்கிழமை விட்டனர்.
செண்பகனூர் பைரவர் கோயில் பகுதியிலுள்ள புதரில் இருந்த இந்த கடமானை பார்த்த சிலர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் அந்த கடமான் காயங்களுடன் இருப்பதை பார்த்து அதை மீட்டு அதற்கு உணவு வழங்கி அப்பகுதியிலுள்ள வனப் பகுதிக்குள் விட்டனர்.
இதுகுறித்து ரேஞ்சர் ஆனந்த் கூறியதாவது: உணவு தேடி வந்த இக்கடமான் தவறி விழுந்ததில் லேசான காயமடைந்துள்ளது. இதையடுத்து வனத்துறையினர் மானை மீட்டு வனப் பகுதிக்குள் விட்டனர் என்றார்.