விண்ணப்பித்துவிட்டீர்களா..? - இந்தியன் வங்கியின் துணை நிறுவனத்தில் வேலை!
பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியின் துணை நிறுவனத்தில் தொடர்பு மேலாளர் மற்றும் டீலர் பணியிடங்கள் குறித்து...
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியின் துணை நிறுவனத்தில் தொடர்பு மேலாளர் மற்றும் டீலர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். 2026/04
பணி: Relationship Manager
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 7
தகுதி : சந்தையியல், நிதியியல் ஆகிய ஏதாவதொரு பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும். என்ஐஎஸ்எம் சான்றிதழ் பெற்றிருப்பது விரும்பத்தக்கது .
சம்பளம்: ஆண்டுக்கு ரூ.4 லட்சம்
வயது வரம்பு: 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Dealer
காலியிடங்கள்: 5
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் என்ஐஎஸ்எம் படிப்பிற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ஆண்டுக்கு ரூ.4.20 லட்சம்
வயதுவரம்பு: 1.1.2026 தேதியின்படி 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
வயதுவரம்பு சலுகை: எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு தலா 10 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, பணிஅனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
நேர்முகத்தேர்வின் போது அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.indbankonline.com என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதுனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Head Administration, No.480,1stFbor, KhivrajComplex, Anna Salai, Nandanam, Chennai-35
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.4.2026
மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Indbank invites applications from eligible candidates for the post of Relationship Manager and Dealer
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.