திண்டுக்கல்

வத்தலகுண்டுவில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

DIN

வத்தலகுண்டு பகுதியில் புதன்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
 வத்தலகுண்டு காந்திநகர் விரிவாக்கப் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (48). ரியல் எஸ்டேட் தரகர். வத்தலகுண்டு பகுதியில் உள்ள கோயிலுக்கு புதன்கிழமை மாலை குடும்பத்தினருடன் பாலமுருகன் சென்றிருந்தாராம். பின்னர் 1 மணி நேரத்துக்குப் பின் வீட்டுக்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்தது. வீட்டிற்குள் சென்று அவர் பார்த்த போது, பீரோவிலிருந்த 8 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.
 இதனை அடுத்து, வத்தலகுண்டு காவல் நிலையத்தில் பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

SCROLL FOR NEXT