திண்டுக்கல்

நூறு நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

DIN

வேடசந்தூர் வட்டாரத்தில், தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் கீழ் பணி ஒதுக்கீடு செய்யக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
     திண்டுக்கல் மாவட்டம்,  வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, மாவட்டக் குழுத் தலைவர் ஆர். முத்துசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, வேடசந்தூர் வட்டாரத்தில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். அதற்கான கூலியாக ரூ. 250 வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதில், நாகையக்கோட்டை, நல்லமன்னார்கோட்டை ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT