திண்டுக்கல்

கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளில் மூன்றாவது நாளாக காட்டுத் தீ

DIN


கொடைக்கானலில் குடியிருப்பு பகுதிகளில் 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் காட்டுத்தீ ஏற்பட்டது.
கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வனப் பகுதி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள புற்கள், மரங்களில் தீப்பிடித்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் பில்டிங், சொசைட்டி, எம்.எம்.தெரு ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் காட்டுத் தீ ஏற்பட்டது. இந்நிலையில், 3ஆவது நாளாக சனிக்கிழமையும் அப்பகுதிகளில் தீப்பிடித்து எரிந்தது. 
அதைத்தொடர்ந்து, சம்பவ இடங்களுக்கு கொடைக்கானல் தீயணைப்புத் துறையினர் சென்று, சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாளேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

SCROLL FOR NEXT