பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயில் எதிரே குளத்து புறவழிச் சாலையில், சாலையோரம் மரத்தில் ஆண் ஒருவரது சடலம் தூக்கில் தொங்கியது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்துள்ளது. தகவலறிந்து பழனி நகர் போலீஸார் வந்து, சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திங்கள்கிழமை இரவு அந்த நபர், தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. சுமார் 50 வயது மதிக்கத்தக்க அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. அதுகுறித்து பழனி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.