திண்டுக்கல்

பழனியில் பங்குனி உத்திர விழா : பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன்

DIN


பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சனிக்கிழமை  பழனியாண்டவருக்கு தீர்த்தக்காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி தீர்த்தம் எடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர்.  
பங்குனி உத்திரக் கொடியேற்ற நாளை முன்னிட்டு தண்டாயுதபாணி சுவாமி பக்தர்கள் பேரவை சார்பில் ஏராளமானோர் வெள்ளிக்கிழமை கொடுமுடி சென்று தீர்த்தம் முத்தரித்து இரவு பெரியநாயகியம்மன் கோயிலை வந்தடைந்தனர்.  சனிக்கிழமை காலை தீர்த்தக்காவடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பழனி மலைக்கோயிலுக்கு காவடிகள் மேளதாளத்துடன் புறப்பாடு செய்யப்பட்டது.  பழனி திருஆவினன்குடி கோயில் சென்று, பின்பு மலையேறிய காவடிகளுக்கு சிறப்பு யாகபூஜைகளும் செய்யப்பட்டன. பின்னர் காவடிகள், மலைக்கோயிலில் தண்டாயுதபாணி சுவாமிக்கு உச்சிக்காலத்தின் போது அபிஷேகம் செய்யப்பட்டது.  
காவடி செலுத்தியபின் அடிவாரம் ஸ்ரீலஸ்ரீ சட்டிசுவாமிகள் மடாலயத்தில் சிறப்பு பொது அன்னதானம் நடைபெற்றது.  இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT