பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி வாயில் முன், 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு, இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், அரசியல் பாகுபாடின்றி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் முழக்கங்களை எழுப்பினர்.