திண்டுக்கல்

திண்டுக்கல் ஆட்டோ ஓட்டுநர் காரில் கடத்திக் கொலை: வாடிப்பட்டி அருகே சடலம் மீட்பு

DIN

திண்டுக்கல்லில் காணாமல் போன ஆட்டோ ஓட்டுநர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சடலமாக மீட்கப்பட்டார்.  அவரை 5 பேர் காரில் கடத்தி கொலை செய்துள்ளதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
  திண்டுக்கல் ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் கார்த்தி (27). ஆட்டோ ஓட்டுநரான இவர் கடந்த மார்ச் 19-ஆம் தேதி ஆட்டோவில் சென்ற பின் திரும்பவில்லை. இதனையடுத்து, அவரது மனைவி பிரேமா திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள விராலிப்பட்டியில் புதர்கள் நிறைந்த பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் போலீஸாரால் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. இது குறித்து, வாடிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், சடலமாகக் கிடந்தவர் திண்டுக்கல்லில் காணாமல் போன கார்த்தி என தெரியவந்தது.  போலீஸார் மேலும் விசாரித்ததில், அவர் கொட்டகை கிருஷ்ணனின் நண்பர் மனோஜ் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பலால் காரில் கடத்தப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.  2015-ஆம் ஆண்டு திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியில் கொட்டகை கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டதற்கு பழிதீர்ப்பதற்காக கார்த்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT