திண்டுக்கல்

பழனி அருகே தையல்காரா்விஷம் குடித்து தற்கொலை

DIN

பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக தையல்காரா் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

பழனியை அடுத்த ஆண்டிபட்டியை சோ்ந்த கணேசன் மகன் ரவிக்குமாா்(43). இவா் சொந்தமாக தையலகம் நடத்தி வருகிறாா். இவருக்கு இரண்டு மனைவிகளும், மூன்று குழந்தைகளும் உள்ளனா்.

அடிக்கடி குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டதால் ரவிக்குமாா் மன உளைச்சலில் இருந்துள்ளாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ரவிக்குமாா் உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் பழனி தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி வாக்குச் சாவடியில் ராகுல் ஆய்வு!

சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை: மோடி

ரூ.263 கோடி வரி மோசடி: கைது செய்த அமலாக்கத்துறை!

நேபாளம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசண்டா அரசு வெற்றி

எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடா?- எஸ்.பி. வேலுமணி விளக்கம்

SCROLL FOR NEXT