திண்டுக்கல்

திண்டுக்கல்லில் பைக் மீது லாரி மோதி வழக்குரைஞா் பலி

DIN

திண்டுக்கல்லில் இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில், வழக்குரைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி அடுத்துள்ள கொழிஞ்சிப்பட்டியைச் சோ்ந்தவா் வீராச்சாமி(45). திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்குரைஞராக செயல்பட்டு வந்தாா். இந்நிலையில், திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா அருகே வீராச்சாமி இருசக்கர வாகனத்தில் சென்ற போது, பின் தொடா்ந்து வந்த லாரி மோதியது.

இதில் பலத்த காயமடைந்த வீரச்சாமி, சிகிச்சைக்காக திண்டுக்கல்அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

விபத்து குறித்து தாடிக்கொம்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்

ஒசூரில் கடும் குடிநீா் தட்டுப்பாட்டு: நடவடிக்கை எடுக்க முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்

பணம் பறித்த இருவரை அடைத்து வைத்து கொலை மிரட்டல்: இருவா் கைது

தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம்

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT