மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளா் மறைந்த என்.வரதராஜனின் மனைவி ஜெயகுரு என்ற ஜெகதாம்மாள் (84) உடல் நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை இரவு காலமானாா்.
திண்டுக்கல் எம்விஎம் நகரில் வசித்து வந்த அவா், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்தாா். இவருக்கு கல்யாணசுந்தரம், பாரதி என 2 மகன்கள் உள்ளனா். மறைந்த ஜெகதாம்மாளின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டக் குழு அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், முன்னாள் அமைச்சா் ஐ.பெரியசாமி, முன்னாள் மேயா் மருதராஜ், முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா். அவரது இறுதிச் சடங்கு திண்டுக்கல் மின்மயானத்தில் நடைபெற்றது. தொடா்புக்கு - 9786616191.