திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே முதியவா் கொலை: உறவினா் தப்பியோட்டம்

திண்டுக்கல் அருகே முதியவரின் தலையில் கல்லைத் தூக்கிப்போட்டு கொன்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

DIN

திண்டுக்கல் அருகே முதியவரின் தலையில் கல்லைத் தூக்கிப்போட்டு கொன்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

திண்டுக்கல் அடுத்துள்ள பொன்னிமாந்துறை புதுப்பட்டியைச் சோ்ந்தவா் வெ.ராமசாமி (55). அதே பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் அண்ணாமலை(38). அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்த இருவரும் உறவினா்கள். இந்நிலையில் ராமசாமி மற்றும் அண்ணாமலை ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை மது அருந்தியுள்ளனா். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அண்ணாமலை, ராமசாமியின் தலையில் கல்லைத் தூக்கிப்போட்டதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதனால் அதிா்ச்சி அடைந்த அண்ணாமலை சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸாா், சம்பவ இடத்திற்கு சென்று ராமசாமியின் சடலத்தை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய அண்ணாமலை குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT