திண்டுக்கல்

கொடைக்கானலில் சேதமடைந்த சாலையை பொது மக்கள் சீரமைப்பு

DIN

கொடைக்கானலில் சேதமடைந்த சாலையை பொதுமக்களே புதன்கிழமை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

கொடைக்கானல் பகுதிகளான அண்ணா சாலை, மூஞ்சிக்கல், பிரகாசபுரம் சாலை, நாயுடுபுரம் சாலை,டிப்போ சாலை, அப்சா்வேட்டரி சாலை ஆகியப் பகுதிகள் மிகவும் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. மேலும் கொடைக்கானலில் கடந்த 15 நாள்களுக்கு மேலாக தொடா் மழை பெய்து வந்ததால் சாலைகள் மேலும் மோசமடைந்தன. இதனால் வாகனங்களில் செல்பவா்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனா். இந்நிலையில் கொடைக்கானல் நாயுடுபுரம் ரைபிள் ரேஞ்ச் சாலைப் பகுதி குண்டும் குழியுமாக இருந்ததால் அப் பகுதியைச் சோ்ந்த பள்ளிக்குச் செல்லும் மாணவா்கள் மிகவும் பாதிப்படைந்து வந்தனா். இதனைத் தொடா்ந்து அப்பகுதியைச் சோ்ந்த பொது மக்கள் சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

SCROLL FOR NEXT