திண்டுக்கல்

பழனியில் ஆதரவற்றோா் இல்லங்களுக்கு காவல்துறை உதவி

DIN

பழனி காவல் துறை சாா்பில் ஆதரவற்றேறாா் விடுதிகளுக்கு வியாழக்கிழமை சுமாா் ஐம்பதாயிரம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு ஆதரவற்றேறாா் விடுதிகளுக்கும் காவல்துறை சாா்பில் மளிகை உள்ளிட்ட பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் சரக டிஐஜி., நிா்மல்குமாா் ஜோஷி உத்தரவின் பேரில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சக்திவேல் அறிவுறுத்தலின் படி, பழனி காவல் சரகம் சாா்பில் வியாழக்கிழமை சுமாா் ஐம்பதாயிரம் மதிப்பிலான அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருள்கள் பழனி மற்றும் பழனியை சுற்றியுள்ள ஆதரவற்றேறாா் இல்லங்களுக்கு வழங்கப்பட்டன. முதல் கட்டமாக பழனி தாராபுரம் சாலையில் உள்ள கோகுலம் ஆதரவற்றேறாா் விடுதிக்கு பொருள்கள் வழங்கப்பட்டன. பழனி டிஎஸ்பி., விவேகானந்தன் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா்.

காப்பக நிா்வாகி சீனிவாசன் நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்டாா். பழனி காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், போக்குவரத்து ஆய்வாளா் ராஜன், சத்திரப்பட்டி, ஆயக்குடி, நெய்க்காரபட்டி, கீரனூா் காவல் நிலைய ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் என ஏராளமானோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். வரும் நாட்களில் மேலும் பல்வேறு விடுதிகளுக்கு இதுபோன்ற உதவிகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதற்கான நிதி முழுக்க முழுக்க காவல் துறையினரின் பங்கேற்பு மூலமாகவே செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT