திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் தற்சார்பு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் திறப்பு

DIN

ஒட்டன்சத்திரத்தில் தற்சார்பு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
      திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் விவசாயிகளால் உருவாக்கப்பட்டுள் ள கிருபா தற்சார்பு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில், அக்ரோ சர்வீஸ் மையம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு, நபார்டு வங்கியின் உதவி மேலாளர் கே. பாலச்சந்திரன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பி. மாரிமுத்து முன்னிலை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் எஸ். பாண்டித்துரை பங்கேற்று, அக்ரோ சர்வீஸ் மையத்தை திறந்துவைத்துப் பேசினார். தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை தரக் கட்டுப்பாடு உதவி இயக்குநர் பி. சுருளியப்பன் முதல் விற்பனையைத் தொடக்கி வைத்தார். 
    இந்த நிகழ்ச்சியில், கிருபா தற்சார்பு உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர்கள் தங்கத்துரை, சுஜாதா, முருகேசன் மற்றும் சிஇஒ சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
 கிருபா தற்சார்பு உழவர் உற்பத்தியாளர் இயக்குநர் சிவக்குமார் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT