திண்டுக்கல்

கொடைக்கானலில் கண்டன பொதுக் கூட்டம்

DIN

கொடைக்கானலில் பழனிமலை ஆதிவாசிகள் விடுதலை இயக்கம் சார்பில் ஜாதி ஆணவப் படுகொலையை  கண்டித்தும், வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்களை கண்டித்தும் மூஞ்சிக்கல் பகுதியில் கண்டன பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்திற்கு பழனிமலை ஆதிவாசிகள் இயக்கத் தலைவர் சுருளிநாதன் தலைமை வகித்தார். பொருளாளர் ஜோதி முன்னிலை வகித்தார். இக் கூட்டத்தில் புரட்சி தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலர் பி.ஈஸ்வரன், ஆதித் தமிழர் மக்கள் கட்சியின் மாவட்டச் செயலர் பாலகிருஷ்ணன், இந்திய குடியரசு கட்சியின் மாவட்டச் செயலர் வின்சென்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். இக்கூட்டத்தில் ஆதித் தமிழர் கட்சியின் ஒன்றியச் செயலர் திருமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில பொதுச்செயலர் மணிகண்டன் வரவேற்றார். சங்கிலி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT