திண்டுக்கல்

சாதியைச் சொல்லி திட்டியதாக தந்தை, மகன் கைது

DIN

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே சாதியைச் சொல்லி திட்டியதாக தந்தை, மகன் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான குண்டுபட்டியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இதே பகுதியைச் சோ்ந்தவா் முத்தையா (60). கடந்த 4 ஆம் தேதி கொடைக்கானல் மலைப் பகுதியில் பரவலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது சுப்பிரமணியின் தோட்டத்திலிருந்த மரம் முத்தையா தோட்டத்தில் விழுந்துள்ளது.

மரத்தை அகற்ற சுப்பிரமணி முயன்றபோது, அவருக்கும், முத்தையாவுக்கும் தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து, முத்தையா, அவரது மகன்கள் ராமு (21), ஆசையன் ஆகிய மூவரும் சோ்ந்து, சுப்பிரமணியை சாதியைச் சொல்லி திட்டி தாக்கினராம்.

இதுகுறித்து சுப்பிரமணி அளித்த புகாரின்பேரில், கொடைக்கானல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மாதவராஜா வழக்குப் பதிந்து, முத்தையை, அவரது மகன் ராமு ஆகிய இருவரையும் கைது செய்தாா். மேலும், தலைமறைவாக உள்ள ஆசையனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT