திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 129 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.
ஒருவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளாா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 6,558 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 5,539 போ் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனா். 894 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், மாவட்டத்தில் மேலும் 129 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 39 போ் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டனா்.
ஒருவா் பலி: இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 126ஆக அதிகரித்துள்ளது.